திங்கள், 24 செப்டம்பர், 2012

அந்த விநாடி...

மரணத்தைவிட கொடூரமான நிகழ்வுகளை அதே மரணம் ஏற்படுத்திவிடுகிறது. எனது நண்பர் சேலம் ஸ்ரீதரின் தங்கை கணவர் பத்து நாட்களுக்கு முன் அகால மரணம் அடைந்துவிட்டார். அவரது ஏழு வயது மகன் பாசக் குறும்பன். அப்பா மீது தனி காதலே உண்டு அவனுக்கு.
தாங்க மாட்டான் என்பதற்காக, "அப்பா ஊருக்குப் போயிருக்கிறார்கள்" என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.
நேற்று அவர்கள் வீட்டுக்குப்போனேன். கட்டிலில், அப்பாவின் புகைப்படம் ஒன்றை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தான். 

எந்த வயதில்... எப்போது, அவன், "அப்பா இல்லை" என்பதை உணருவான்..
அந்த விநாடி எப்படி இருக்கும்...
அதிர்ச்சி அடைவானா, அழுவானா, பொல்லா இயற்கை மீது கோபங்கொள்வானா...
அவனது அந்த கணத்தை நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக